எதிரடுக்கில் அமைந்த காம்புள்ள முழுமையான இலைகளையும் நீண்ட கதிர்களையும் உடைய சிறு செடிகள்.இவற்றில் தண்டும் இலையும் சிவந்து காணப்படும் வகை செந்நாயுருவி எனப்படும். தமிழகத்தின் எல்லா மாவட்ங்களிலும் தானே வளர்கிறது. எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையவை.
இலையை கசக்கித் தேய்க்க தேள் விஷம் இறங்கும். 10 கிராம் செந்நாயுருவி இலையை மென்மையாய் அரைத்து சிறிது நல்லெண்ணெய் கலந்து காலை மாலையாக பத்து நாள் கொடுக்க இரத்த மூலம் தீரும். செந்நாயுருவீ வேர்பட்டை மிளகு சனமளவு பொடித்துக் கால் கிராம் தேனில் குழைத்துக் காலை,மாலை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.
10 கிராம் விதையை அரைத்துக் காலை,மாலை 2 நாள்கள் சாப்பிட பேதி தீரும்.
நாயுருவி மருத்துவ பயன்
சிறுநீர் பெருக்குதல்,நோய் நீக்கி உடல் தேற்றுதல்,சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்தல் ஆகியவை இதன் பொது மருத்துவ குணங்களாகும். நாயுருவி இலைசாற்றை தடவி வர தேமல்,படை முதலியவை குணமாகும்.இலையை கசக்கித் தேய்க்க தேள் விஷம் இறங்கும். 10 கிராம் செந்நாயுருவி இலையை மென்மையாய் அரைத்து சிறிது நல்லெண்ணெய் கலந்து காலை மாலையாக பத்து நாள் கொடுக்க இரத்த மூலம் தீரும். செந்நாயுருவீ வேர்பட்டை மிளகு சனமளவு பொடித்துக் கால் கிராம் தேனில் குழைத்துக் காலை,மாலை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.
10 கிராம் விதையை அரைத்துக் காலை,மாலை 2 நாள்கள் சாப்பிட பேதி தீரும்.
